Saturday, November 15, 2014

மாமன்னர் மருதுபாண்டியர்களால் சிவகங்கை சீமையில் உருவாக்கப்பட்ட ஊருணிகள், குளங்கள!

1.சிவகங்கை முத்துப்பட்டி ஊருணி
2.சிவகங்கை உடையார் சேர்வை ஊருணி
3.சிவகங்கை ஆத்தா ஊருணி
4.சிவகங்கை இலட்சுமி தீர்த்தம்
5.காளையார்கோயில் கோயில் உள் திருக்குளம்
6.காளையார்கோயில் ஆனை மடு
7.காளையார்கோயில் மருதவனப் பொய்கை
8.கொல்லங்குடி மருது ஊருணி
9.குன்றக்குடி மருதாபுரிக்குளம்
10.சிறுவயல் புலிக்குட்டியம்மன் கோயிலுக்காக ஒரு திருக்குளம்
11.சிறுவயல் கிருஷ்ணர் கோயிலுக்காக ஒரு குளம்
12.சிறுவயல் கிராம மக்களின் குடிநீருக்காக மாண்கொண்டான் பொயகை ஊருணி
13.சிறுவயல் வண்ணார்குளம்
14.சங்கரமதி ஊருணி
15.தொண்டி கைக்களான் குளம் என்ற காளிகனத்தான்குளம்
16.நரிக்குடி ஊருணி
17.திருக்கோட்டியூர் திருக்குளம்

கேணிகள் :-

நரிக்குடியில் மருதுபாண்டியர் கிணற்றை பாண்டியன் கிணறு என்றே அழைக்கின்றனர். நரிக்குடியை போலவே பல இடங்களில் தாகம் தீர்த்திட தடாகம் மட்டுமில்லாமல் கிணறுகளும் தோண்ட செய்தனர் மாமன்னர் மருதுபாண்டியர்கள். சிவகங்கை - மானாமதுரைச் சாலையில் கீழவாணியங்குடி அருகிலும் சிவகங்கை - வரிச்சூர் சாலையில் முத்துப்பட்டிக்கு முன்னதாகவும் மருதுபாண்டியர் கிணறுகள் இருந்து தூர்ந்து போய் கிடக்கின்றன.

மாமன்னர் மருதுபாண்டியர்கள் மக்களின் குடிநீர் தேவைக்காக நகர்நடுவிலும் சாலையோரங்களிலும் கோயில்களை ஒட்டியும் வெட்டிய குளங்களும், மற்றும் கிணறுகளும் எண்ணற்றவை. ஆதாரப்பூர்வமாகத் தெரிந்த சில குளங்களும், கிணறுகளையுமே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment