Saturday, November 15, 2014

மாமன்னர்கள் பற்றி தமிழ் தாத்தா!


பெரியமருதுபாண்டியர் தெய்வபக்தி உடையவர். தம் ஆட்சிக்குட்பட்ட ஆலயங்களில் நித்திய நைமித்தியங்கள் விதிப்படி காலத்தில் நடந்துவரும் வண்ணம் வேண்டியவற்றைச் செய்துள்ளார். ஆலயங்களுக்குத் தேவதானமாக நிலங்களை அளித்திருக்கின்றார்.

-டாக்டர் உ.வே.சாமிநாதையர்.

ஏடுதேடி டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் மருதுபாண்டியர்கள் ஆட்சி செய்த நாடு முழுமையும் சுற்றி வந்தபின் கண்டறிந்து தான் எழுதிய மருதபாண்டியர் புத்தகத்தில் கலைமகள்/ஆங்கிரச 1932 ம் தொகுதி பக்கம் 995 ல் சொன்னவையே மேலே உள்ள வாசகங்கள்.

இந்து சமய அறநிலையங்களுக்கு அவர்கள் ஆற்றிய பணி பற்றி மாவட்ட கெசட்டியர் ""marudhu brothers:- a revolution in hinduism is brought by them many temples and chatrams were built during their periods dr.a.ramasamy RAMANATHAPURAM DISTRICT GAZETTEER page 893" மருதுபாண்டியர்கள் இந்து சமயம் உய்ய ஒரு புரட்சியை கொண்டு வந்தனர். அவர்கள் காலத்தில் தான் மிகப்பலவான கோயில்களும் சத்திரங்களும் கட்டப்பட்டன" என ஏற்றிப்போற்றுகிறது.

(மருத பாண்டியன் நூலிலிருந்து...)

0 comments:

Post a Comment